உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 27, 2010

கடலூரில்பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு

கடலூர்:


           கடலூரில் பிரபாகரன் படத்துடன் பேனர் வைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

             கடலூரில் காமராஜர் பூங்கா அருகே விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் இன்று காலை பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம், வீரவணக்கம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

               நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த பேனரை வைத்ததாக தெரியவந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேனர் வைத்ததாக நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த கடலூர் முதுநகரில் உள்ள ஜலதீபன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரபாகரன் படத்துடன் இருந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior