உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 11, 2010

பண்ருட்டியில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பண்ருட்டி:

                விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் பண்ருட்டி சார்பு நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

              பண்ருட்டி திருவதிகை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கார் ஓட்டுனர் ராமமூர்த்தி. இவர் 24.11.1998 அன்று பட்டுக்கோட்டை அருகே கார் ஓட்டிச் சென்றபோது அரசு விரைவு பஸ் மோதி இறந்ததாக கூறப்படுகிறது. இது தொர்பாக ராமமூர்த்தியின் மனைவி செல்வராணி, பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் 1999-ம் ஆண்டு வழக்குத் தொடுத்துள்ளார். 2006-ம் ஆண்டில் வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இறந்த ராமமூர்த்தியின் குடும்பத்துக்கு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

                  இத்த இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் செலுத்தாததால் வட்டி, வழக்குச் செலவு உள்பட ரூ.14,72,308-க்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்ûஸ பறிமுதல் செய்ய சார்பு நீதிபதி கலியமூர்த்தி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் பண்ருட்டி வந்த அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்ûஸ பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior