உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 24, 2010

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டை வெல்டிங் மூலம் அகற்றி திருட்டு

கிள்ளை : 

                 சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை வெல்டிங் மிஷினால் "கட்' செய்து, கடையில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் கீழச்சாவடி ஆத்துமதகு அருகில் டாஸ்மாக் இயங்கி வருகிறது. அள்ளூர் ஜோதிரத்தினம் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இரும்பு ஷட்டர் கதவை மூன்று பூட்டுகளால் பூட்டி விட்டுச் சென்றார். காலையில் வந்து பார்த்த போது, நடுவில் இருந்த பூட்டு மட்டும் வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

                   உள்ளே சென்று பார்த்த போது 2,352 பிராந்தி பாட்டில்கள் அடங்கிய 49 கேஸ் மற்றும் 144 பீர் பாட்டில்கள் அடங்கிய 12 கேஸ் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு இரண்டு லட்சத்து 600 ரூபாய். மேலும்  180 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லறை காசுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த கிள்ளை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து  ஜோதிரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior