உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 12, 2010

பண்ருட்டி வாலாஜா வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

பண்ருட்டி : 

                   பண்ருட்டி அம்பேத்கர் நகரில் வாலாஜா வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. 

                பண்ருட்டி விழமங்கலம் ஆண்டிக்குப்பம் 1வது வார்டில் துவங்கும் வாலாஜா வாய்க்கால் நீர்  திருவதிகை கெடிலம் ஆற்றில் கலக்கிறது. வாலாஜா வாய்க்கால் நகரின் முக்கிய கழிவுநீர் செல்லும் வாய்க் காலாக உள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதிகளவில் வாழும் பகுதியாக உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள இவ்வாய்க்காலில் பிளாஸ்டிக் அடைப்பு காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. 

                     அதேப்போன்று கனமழையின் போது 10 வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீருடன் கலந்து வெளியேறும் போது இப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் அடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் மக்கள் சிக்கிய பின் பொக்லைன் இயந்திரம் மூலம் அடைப்புகளை எடுத்து சீரமைப்பு பணி செய்வதை விட மழை வரும் முன்பே வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior