உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 21, 2010

விவசாயிகளுக்கு ரூ.2000 கோடி கடன் : எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் : 

            விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். 

            கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலத்தில் நூலக திறப்பு மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா  நடந்தது. கீழ்குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். குடிமைப் பொருள் தனி தாசில்தார் காந்தி வரவேற்றார். ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயபால், பி.டி.ஓ.,க்கள் சந்தர், பத்மநாபன், கீழ்குமாரமங்கலம் ஊராட்சி துணைத் தலைவி இளவரசி, நுகர்வோர் குழு ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

 எம்.எல்.ஏ., அய்யப்பன்  நூலகத்தை திறந்து வைத்தும், கீழ்குமாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 644 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கி பேசுகையில்

                     "முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகளை அரவணைத்துச் செல்லும் அரசாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் விளைப் பொருட்களை பயிரிட விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior