உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

கடலூரில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

கடலூர் : 

             மகளிர் திட்டத்தின் மூலம்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடலூர் டவுன் ஹாலில் துவங்கியது.

கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

               இக்கண்காட்சி வரும் 12.1.2011 வரை 29 நாட்கள் காலை முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மகளிர் குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களின் விற்பனை செய்யப்படும். கண்காட்சியின் போது மாலை வேளைகளில் பல்வேறு தொழில் முனைவது சம்மந்தமான தொழில் நுட்ப செயல்முறை விளக்கங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

                  22 அரங்குகளில் மகளிர் திட்டம் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், மகளிர் திட்டம் அல்லாத தொண்டு நிறுவனங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் விற்பனையில் இடம் பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் மகளிர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior