உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 23, 2010

பண்ருட்டியில் குறித்த நேரத்தில் இயக்காத பஸ்மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு:

           சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்மாம்பட்டு, நெல்லித்தோப்பு, இடையார்குப்பம், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் சாத்திப்பட்டு - கடலூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக அரசு பஸ் தடம் எண் 27 எஸ் இயக்கப்படுகிறது.

             இந்த பஸ் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கு வருவதில்லை. காலை நேரத்தில் சாத்திப்பட்டில் காலை 7.50க்கு கிளம்பி சி.என்.பாளையத்திற்கு 8 மணிக்கு வர வேண்டும். ஆனால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தாமதமாக வருகிறது.இந்த சிங்கிளில் தான் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

         சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு போய் சேர முடியாததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் நலனுக்காக விடப்பட்ட பஸ் காலதாமதமாக வந்தால் அவர்களுக்காக பஸ் இயக்கப்படுவதில் அர்த்தமில்லாமல் போகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பஸ்சை சரியான நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior