உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 28, 2010

பண்ருட்டி அருகே தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சிறுமி படுகாயம்



பண்ருட்டி : 

            கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தொகுப்பு வீட்டின் சிமென்ட் காரை விழுந்ததால், 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். 

             பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில், தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி செல்வி, மகன் உத்திரவேல், மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு வீட்டின் மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் சிறுமி ஆர்த்தீஸ்வரியின் (5) வயிற்றில் விழுந்து கிழித்து, குடல் வெளியே வந்தது. சிறுமி "108' ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், இப்பகுதியில் உள்ள 50 தொகுப்பு குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior