உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 19, 2011

பிறக்கும் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை திட்டம் 1 வாரத்தில் தொடக்கம்: எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

சிதம்பரம்:
 
             கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டி.டிரஸ்ட் மண்டபத்தில் நடந்தது. விழாவில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன் வரவேற்று பேசினார்.

                 நகராட்சி தலைவர் பவுஜியாபேகம் தலைமை தாங்கினார்.கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 15 ஆயிரத்து 854 பேருக்கு இலவச கலர் டி.வி.யையும், 904 பேருக்கு மகப்பேறு உதவி திட்டத்தையும் வழங்கி பேசினார்.

அப்போது தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கூறியது:-

            கடலூரில் பாதாள சாக்கடை திட்டம் 160 கிலோ மீட்டர் தூரம் அமைப்பதற்கான வேலை நடந்து வந்தது. இந்த திட்டம் நிறைவேற 4 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டம் சற்று காலதாமதம் ஏற்பட்டதும் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர் கட்சிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தி அரசியல் ஆக்கி விட்டார்கள்.

              அதேபோல் சிதம்பரத்திலும் இந்த திட்டம் செயல்படுத்திட 4 ஆண்டுகள் ஆகும்.அதேபோல் இங்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, இலவச டி.வி. , கியாஸ் அடுப்பு, பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம்.இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிதம்பரம் நகராட்சி தலைவி நினைத்து பார்க்க வேண்டும்.நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நகராட்சி தலைவர் கூற வேண்டும்.

                 கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.தமிழகத்தில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, இலவச டி.வி. , கியாஸ் அடுப்பு, பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிதம்பரம் நகராட்சி தலைவி நினைத்து பார்க்க வேண்டும்.நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நகராட்சி தலைவர் கூற வேண்டும். தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் செயல் படுத்தப் பட்டு வருகிறது.பிறக்கும் குழந்தைகளுக்கு 1 வயது வரை ரூ.1 லட்சம் செலவில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை இன்னும் 1 வாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார்.

                    ஏழை மக்களுக்கு பயன்படுகிற திட்டத்தை கலைஞர் அரசு செய்கிறது. கலைஞர் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்று வருகிறார்கள். கடந்த 23 ஆண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் என்ன திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார். 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior