உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 19, 2011

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் "ஹால் டிக்கெட்'

            பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் நுழைவு சீட்டு வழங்கப்படுகின்றன.

             பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து ஏழு லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இத்தேர்வு, வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே பொதுத்தேர்வு தேதி நெருங்கி விட்டதால், மாணவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'டுகள், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

              மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், "ஹால் டிக்கெட்டு'கள் தனித்தனியே பிரித்து அனுப்பப்படுகின்றன. வரும் 21ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு, "ஹால் டிக்கெட்டுகளை வழங்க, தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரத்துடன், மாணவர்களுக்கான வகுப்புகளும் முடிகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior