உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 08, 2011

காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான கூரைப் பயணம்

சிதம்பரம் : 

             காட்டுமன்னார்கோவில் - சிதம்பரத்திற்கு காலை நேரங்களில் கூடுதல் பஸ் இன்றி ஆபத்தான கூரைப்பயணத்தால் விபத்துகள் நிகழ்கிறது. காட்டுமன்னார்கோவில்பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

             இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியவாசிய தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் தினமும் சிதம்பரம், கடலூர் பகுதிக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அதற்கேற்ப காலை நேரத்தில் போதுமான பஸ் வசதி இல்லை. குறைந்த எண்ணிக்கையில் வரும் பஸ்களில் தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் பஸ் படிக்கட்டில் தொற்றிக் கொண்டும், கூரை மீதும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். 

             எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு சாலையோரத்தில் செல்லும் பாசன வாய்க்காலில் பஸ் கவிழுமானால் பெரும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகி விடும். அதிகாரிகள், காலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior