உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 21, 2011

திசு வாழை பயிர் சாகுபடி முறை

            திசு வாழை பயிரிட்டால் ஹெக்டேருக்கு ரூ.2.50 லட்சம் வரை நிகர லாபம் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.  

               தோட்டப் பயிர்களில் மிக முக்கியமான பழவகைப் பயிர் வாழை. வாழைப்பழம் உணவுப் பொருளாகவும், மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழகத்தில் பலவகையான வாழை ரகங்கள் மாவட்டங்களுக்கேற்ப உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தால் போல் பயிரிடப்படுகின்றன.  இவற்றில் பச்சை வாழை ரகங்கள் மட்டும் 50 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பூவன், ரஸ்தாளி, நெய்பூவன், நேந்திரன், மொந்தன் செவ்வாழை, கற்பூரவள்ளி போன்ற ரகங்களும் பயிரிடப்படுகின்றன.  


             இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 743 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மொந்தன் வாழை மட்டும் சுமார் 60 சதவீத பரப்பளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தி திறன் சராசரியாக ஹெக்டேருக்கு 47.74 மெ.டன் ஆகும். மொந்தன் வாழை சாகுபடியில் ஹெக்டேருக்கு ரூ.1.50 லட்சம் வரை தற்சமயம் விவசாயிகள் நிகர லாபமாக பெற்று வருகின்றனர்.   ஆனால் வளர்ந்து வரும் மக்கள்தொகை தேவைக்கேற்ப தற்சமயம் உள்ள உற்பத்தித் திறனை பெருக்குதலும், அதற்காக உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகிறது.  

            தரமான உற்பத்திக்கும், அதிக உற்பத்திக்கும் அதாவது சராசரியாக ஹெக்டேருக்கு 100 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்வதற்கும் திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை உபயோகித்தல், சொட்டுநீர் உர பாசன முறைகளை பயன்படுத்துதல் போன்ற கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை தற்சமயம் பின்பற்றுதல் மிகவும் முக்கியமான தீர்வாக உள்ளது.  திசு வாழை சாகுபடியில் நன்கு கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை கையாளும் விவசாயிகள் கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்தாலும், ஹெக்டேரில் ரூ.2.50 லட்சத்துக்கும் மேல் நிகர லாபமாக பெருவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.  

           இந்தப் பயன் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட தோட்டக்கலைத் துறை மூலம் தரமான திசு வாழைச் செடிகள் மாவட்டத்தின் கோலியனூர், காணை, கண்டமங்கலம், கள்ளக்குறிச்சி, திருவெண்ணைய்நல்லூர், வானூர் போன்ற ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ÷இதற்கான கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளும் மாவட்டத்திலுள்ள திசு வாழை சாகுபடியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

            மேலும் திசு வாழைக்கு காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தவிர்க்க வாழை சாகுபடி செய்யும் வயல்களின் ஓரத்தில் அகத்தியை ஓரப்பயிராக இருவரிசைகளில் சாகுபடி செய்து காற்றின் வேகத்தை குறைப்பதன் மூலம் காற்றினால் வாழைக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்க்கலாம்.  

இந்த திசு வாழை பயிரிட ஏற்ற காலம் குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் என். பன்னீர்செல்வம் கூறியது:  

            திசு வாழை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நமது மாவட்டத்தில் திசு வாழை செடிகளை நடவு செய்து, கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை கையாண்டு அதிக உற்பத்தி மற்றும் அதிக லாபம் மூலம் வீட்டுக்கும், நாட்டுக்கும் நலம் மற்றும் வளம் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொட்டுநீர் உர பாசன முறையில் திசு வாழை செடிகளை பருவத்தே நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் ஒன்றியத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior