உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 21, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:

        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வியாழக்கிழமை (21-ம் தேதி) காலை 10 மணிக்கு 2011-12 ம் ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா நடைபெறுகிறது.  விழாவில் துணைவேந்தர் எம்.ராமநாதன் பங்கேற்று விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைக்கிறார். தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகிக்கிறார்.  விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior