உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 01, 2011

பொறியியல் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு அஞ்சலகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு

          பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுக்கு அஞ்சலகங்களிலும் பெயரைப் பதிவு செய்யலாம்.

இதுதொடர்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியின் ரோட்டரி சங்கம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஏஐஇஇஇ மாதிரி நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வு தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்.விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை மண்டல பொறியியல் கல்லூரியில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் நேரடியாக வந்துப் பதிவு செய்வதற்குப் பதிலாக அருகிலுள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கடலூர், 
சிதம்பரம், 
கரூர், 
குளித்தலை, 
கும்பகோணம், 
மயிலாடுதுறை, 
சீர்காழி, 
நாகப்பட்டினம், 
திருவாரூர், 
பட்டுக்கோட்டை, 
திருத்துறைப்பூண்டி, 
புதுக்கோட்டை, 
ஸ்ரீரங்கம், 
துறையூர், 
பெரம்பலூர், 
ஞ்சாவூர், 
மன்னார்குடி, 
திருச்சி, 
லால்குடி, 
விருத்தாசலம், 
கள்ளக்குறிச்சி, 
திருக்கோவிலூர், 
மதுரை, 
கோவை, 
நெல்லை 

ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

           விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இந்த அஞ்சல் நிலையங்களில் தங்களது பெயரை ரூ. 100 கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்து, நுழைவுச் சீட்டையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

திவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 12.

மேலும் விவரங்களுக்கு, 

மாணவ ஒருங்கிணைப்பாளர் வினோத் 
செல்போன் எண்: 90035 75450,

ஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்திலுள்ள வணிக வளர்ச்சி மேலாளர் செல்போன் எண்: 94432 07898 

ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior