உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 02, 2011

சிதம்பரம் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.6 லட்சம் செலவில் புதிய போர்வெல்

சிதம்பரம்:

         சிதம்பரம் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வடக்குமெயின்ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ. 6 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் ஹெச். பௌஜியாபேகம், அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்தினார்.

            சிதம்பரம் நகரில் மேற்கு பகுதியில் குறிப்பாக 2, 3, 4, 10, 11, 12  உள்ளிட்ட வார்டுகளில் குடிநீர் சப்ளை சரிவர இல்லாததால் மக்கள் அவதியுற்றனர். ஏற்கனவே மீன்மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் பழுதடைந்தது. ஆதலால் தற்போது மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ.6 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போர்வெல் அமைக்கும் பணியை நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், உதவிப் பொறியாளர் மணிவண்ணன், மின் கண்காணிப்பாளர் ஷேக்மைதீன் உள்ளிட்டோர் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்குமாறு உத்தரவிட்டார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior