உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 07, 2011

கடலூரில் சாலையோர பூங்கா மற்றும் நீரூற்று பராமரிப்பின்றி காய்ந்து வரும் அவலம்

 கடலூர் : 

            கடலூர் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலையோர பூங்கா, நீரூற்று பராமரிப்பின்றி உள்ளது. 

         கடலூர் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி சாலையோரத்தில் 5 இடங்களில் பூங்கா மற்றும் நீரூற்றுகளை அமைத்தார். கடந்த 2004-05ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில் 6.75 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாபாலம் சிக்னல் அருகே நீரூற்று மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் ரசாயன கம்பெனிகள் இந்த பூங்காவை பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன. 

             அவற்றில் ஒரு சில ரசாயன கம்பெனிகள் முறையாக பராமரித்து வருகின்றன. அண்ணாபாலம் சிக்னல் அருகே எதிரெதிரே அமைக்கப்பட்ட பூங்காக்களில் ஜவான்ஸ் பவன் அருகே அமைக்கப்பட்ட பூங்கா டான்ஃபேக் நிறுவனம் பராமரித்து வந்தது. தற்போது அதிலிருந்த மின் மோட்டார் காணாமல் போனதைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள அழகான செடிகள், பூச்செடிகள் காய்ந்து வருகின்றன. நீரூற்றும் செயல்படவில்லை. எனவே பழுதாகியுள்ள நீரூற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior