உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 28, 2011

பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணச் சலுகை

             2011-2012ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

            இந்த சலுகையினைப் பெற சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, வெளியூரிலிருந்து வரும் மாணவ / மாணவிகள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் ஒளி நகலை சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் ஒளி நகலை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் 50 சதவீத கட்டணச் சலுவை வழங்கப்பட்டதென அழைப்புக் கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றிளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை 1+1 மாணவர்களுக்கு வழங்குவர். இதே நடைமுறை கலந்தாய்வினை முடித்து ஊருக்கு செல்வதற்கும் பொருந்தும் என தொழில் நுட்பக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior