உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 08, 2011

சிதம்பரம் நகராட்சியில் ரூ. 10 லட்சத்தில் துப்புரவு வாகனங்கள்

சிதம்பரம்:

               சிதம்பரம் நகராட்சியில் துப்புரவு பணிக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள குப்பைகள் எடுத்துச் செல்லும் வகையில் ரிக்ஷா வடிவில் புதிய வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

              சிதம்பரம் நகரில் குப்பை அள்ளுவதற்கு போதிய வாகனங்கள் இல்லாததால் குப்பைகள் பிளாஸ்டிக் பாயில் கொட்டி இழுத்துச்செல்லும் நிலை இருந்தது. துப்புரவுப் பணிக்கு சைக்கிள் ரிக்ஷா வடிவில் வாகனங்கள் வழங்க வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொதுநிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் சைக்கிள் ரிக்ஷா 33 துப்புரவு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு ஒரு துப்புரவு வண்டிகள் வழங்கப்படும் என நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தெரிவித்தார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior