உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 08, 2011

பண்ருட்டி சக்தி ஐடிஐ யில் வேலைவாய்ப்பு முகாம்

  பண்ருட்டி:
  
         பண்ருட்டி சக்தி ஐடிஐ-யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஐடிஐ வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.ப

            ண்ருட்டி காந்தி சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே சக்தி ஐடிஐ இயங்கி வருகிறது. இந்த ஐடிஐ நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று கொடுத்து வருகிறது. 2010-2011 ம் ஆண்டு பயிற்சி பெற்று ஜூன் 2011-ல் தேர்வு எழுதிய வெல்டர் பிரிவு அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 1-ம் தேதி ஐடிஐ வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

                புதுச்சேரியை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தின. இதில் பங்கேற்ற சக்தி ஐடிஐ மாணவர்கள் 38 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு ஜூலை 6-ம் தேதி முதல் பணியமர்த்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியல் தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் அ.ப.சிவராமன், தாளாளர் ஆர்.சந்திரசேகர், இயக்குநர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ஜி.ரவிச்சந்திரன், முதல்வர் மற்றும் பயிற்றுனர்கள் கலந்துக்கொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior