உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 02, 2011

நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/e32bb8b0-be0e-462a-b969-6471cd97ff8f_S_secvpf.gif

நெய்வேலி:

           நெய்வேலி புதுநகர் 16-வது வட்டம் வேலுடையான்பட்டு திருமண மண்டபத்தில் நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

             நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுனர் கேதர் நாதன் தலைமை தாங்கினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கத்துறை செயல் இயக்குனர் ராமலிங்கம் மற்றும் துணை ஆளுனர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தனர்.

             இதில் 2011-2012-ம் ஆண்டுக்கான புதிய தலைவராக கோவிந்த ராஜனும், செயலாளர்களாக குலோத்துங்கனும், பொரு ளாளராக ரவீந்திரன் நாயர் ஆகியோரும் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர்.   எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

                சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் ஈஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். பவர் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பெருமாள்சாமி, காதர், செல்வம், அன்பரசு, ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். முடிவில் குலோத்துங்கன் நன்றி கூறினார். 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior