உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 19, 2011

கடலூருக்கு இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் வருகை

கடலூர்  முதுநகர் :

           "கிரிக்கெட் மூலம் அனைவரிடமும் எளிதாக ஐக்கியமாக முடியும்'' என இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசினார். கடலூர் ரோட்டரி கிளப் மிட்டவுன் 2011 - 12 புதிய தலைவராக கூத்தரசன், செயலராக மணிகண்டன் பதவியேற்றனர். 

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் ஸ்ரீகாந்த் பேசியது: 

           கடலூர் கிரிக்கெட் கவுன்சிலும், ரோட்டரி கிளப்பும் இணைந்து கடலூர் நகரின் வளர்ச்சி பணிக்காக பாடுபட வேண்டும். எனது சொந்த ஊரான கடலூரில் கல்வியறிவு படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். எனது தந்தை மற்றும் உறவினர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். எனது பூர்வீக வீடு இப்பகுதியில் உள்ளது. கடலூரில் பொது நிகழ்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி அதிகமான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன். கிரிக்கெட் ஒரு சிறந்த மொழி இதன் மூலம் அனைவரிடமும் எளிதாக ஐக்கியமாக முடியும். இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார். விழாவில் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், நடராஜன் பங்கேற்றனர். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior