உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 19, 2011

வீராணம் குடிநீர் இன்றுமுதல் சென்னைக்கு விநியோகம்

வீராணம் ஏரி நீரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்

நெய்வேலி:

          நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து நீரேற்று நிலையத்திலிருந்து வீராணம் நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணி மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. 

                இதை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சென்னை நகர மக்களுக்கு வீராணம் குடி நீர் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.  கடந்த 2004-ம் ஆண்டு ரூ. 720 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் மூலம் 13. 288 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வீராணம் ஏரியில் நீர் இருப்பு குறைந்தததாலும், தூர்வாரும் பணி நடைபெற்றதாலும், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் இந்த ஆ மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. 

               இதையடுத்து இம்மாதம் 10-ம் தேதி வீராணம் ஏரியிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வடக்குத்து சுத்திகரிப்பு நிலையம் வரை 22 கி.மீ. நீளமுள்ள குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, வடக்குத்து நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணியினை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.  இதன் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படவிருப்பதாகவும், திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு அனுப்பப்பட்ட இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் வழியாக 6 மணி நேரத்தில் சென்னை போரூரை சென்றடையும் என்றும், அதன்பின்னர் சென்னை நகர பகுதிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

             சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், மற்றும் வீராணம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் 6095 மில்லியன் கன அடி நீர் உள்ளது.  இது மொத்த கொள்ளளவில் 48.67 சதவீதமாகும். இதன்மூலம் சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலும் எனவும் அமைச்சர் கே.பி.முனுசாமி மேலும் தெரிவித்தார். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior