உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 19, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

குறிஞ்சிப்பாடி : 

           குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. 

              கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வணங்காமுடி, அரசு கல்லூரி பேராசிரியர் தமிழ்செல்வன், அறிவழகன், முன்னாள் மாணவர் விஷ்ணுதாஸ் அகியோர் பேசினர். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக உறுப்பினர் ராமலிங்கம், வைத்தியலிங்கம், சுந்தரமூர்த்தி, மோகன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior