உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 23, 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வகுப்புகள் தொடங்க கோரிக்கை

சிதம்பரம்:

         சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனு விவரம்:

          சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி.யில் விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முதுகலைப் பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட வட தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை முடிவடைந்துள்ளது.

            பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு வராத பி.சி. மற்றும் ஓ.சி. இடங்களை எம்.பி.சி. மற்றும் எஸ்.சி. மாணவர்களுக்கு வழங்க உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior