உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 27, 2011

திட்டக்குடி போத்திரமங்கலத்தில் வார்டுகள் சரியாக பிரிக்க வலியுறுத்தி முற்றுகையிடும் போராட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4c1d83de-d365-43c5-81b9-98d82b08fbc2_S_secvpf.gif
 
திட்டக்குடி:

          திட்டக்குடியை அடுத்துள்ள போத்திரமங்கலம் கிராம மக்கள் போத்திர மங்கலத்தில் வார்டுகள் முறையாக பிரிக்கப்படவில்லை. போத்திர மங்கலம் கொட்டாரம் பகுதிகளை தனித்தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து மங்களுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

              இதைதொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் சையத்ஜாபர் போத்திர மங்கலம் கிராம மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசினார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்க கொளஞ்சிநாதன், முத்த ழகன், ஒன்றிய கவுன்சிலர் திருமாறன், வார்டு உறுப்பினர் அருந்தவம் ராஜா, ராமு அ.தி.மு.க, முல்லைநாதன் காங். ரவி தே.மு.தி.க, சீனிவாசன் காங் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

             மேலும் இந்த பேச்சு வார்த்தையில் மங்களுர் ஒன்றிய ஆணையர் செல்வநாயகி, துணை ஆணையர் விஜயா, போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேமா, குமார் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரசாரமான விவாதம் சுமார் 3 மணி நேரம் நடந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க உறுதி அளித்ததை ஏற்று கிராம மக்கள் அறிவித்திருந்த முற்றுகை போரட்டத்தை கைவிட்டனர்.
 
               
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior