உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 27, 2011

கடலூர் புலியூர் காட்டுசாகையில் பா.ம.க - தே.மு.தி.கவினர் மோதல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/92c9f6d1-b114-42ed-8426-055f70799da5_S_secvpf.gif
 
கடலூர்:

             குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் அருள்ஜோதி (வயது 38). தே.மு.தி.க. மாவட்ட தொண்டரணி தலைவராக உள்ளார். 
 
             இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரான திருமால்வளவனுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அருள்ஜோதியின் தந்தை ரங்கநாதன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் தகராறு செய்து ரங்கநாதனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தடுக்க முயன்ற தே.மு.தி.க.வை சேர்ந்த குமார், முருகன் ஆகியோரையும் அவர்கள் கத்தியால் குத்தினார்கள்.

             இதில் காயமடைந்த ரங்கநாதன், குமார், முருகன் ஆகியோர் கடலூர் அர2 மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தொகுதி எம்.எல். ஏ. சிவக்கொழுந்து நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது கடலூர் நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் வைத்திய நாதன், கடலூர் நகர துணை செயலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior