உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

தமிழ் சேனல்களை கட்டணமில்லா சேனலாக அறிவிக்க வலியுறுத்தல்

சிதம்பரம்:

              கடலூர் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது. 

             தலைவர் எம்.எஸ்.ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். ஆபரேட்டர்கள் முத்து, ராஜேஷ், இளஞ்செழியன், அசோக், ராஜசேகர், குமார், பட்டாபி, செந்தில்குமரன், சபா, பாலாஜி, பாபு, ஆதிநாராயணன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருகிற ஜூலை 18-ம் தேதி மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தை மாலைக் கட்டித்தெரு ஆறுமுகநாலலர் நிலையத்தில் நடத்துவது. அரசு கேபிள் டி.வி.யை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவராக உடுமலை கே.ராதாகிருஷ்ணனை நியமனம் செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.

               சன் டி.வி. குழும ஆதிக்கத்திலிருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் தமிழ் சேனல்கள் அனைத்தையும் கட்டணமில்லா இலவச சேனலாக அறிவிக்க வலியுறுத்துவது. அரசு கேபிள் டி.வி.க்கும் கேபிள் ஆபரேட்டர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை அறவே ஒழிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior