உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

புதுவையில் தேசிய மூத்தோர் தடகளப் போட்டி: கடலூர் மாவட்டத்திற்கு 24 பதக்கம்

கடலூர்:

              புதுவையில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் கடலூர் மாவட்ட மூத்த தடகள வீரர்கள் 24 பதக்கங்களை வென்றனர். 

                31-வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் புதுவையில் கடந்த 4-ம் தேதிமுதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 1,125 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து 70 பேரும், கடலூர் மாவட்டத்தில் இருந்து 25 பேரும் கலந்துகொண்டனர். 

                இப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற பதக்கங்கள் 56 (15 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம்). அதில் கடலூர் மாவட்டத்தினர் 14 பேர் பெற்ற பதக்கங்கள் 24 (7 தங்கம், 10 வெள்ளி. 7 வெண்கலம்). இப்போட்டியில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தையும், மகாராஷ்டிரம் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பிடித்தது. 

கடலூர் மாவட்டத்தில் பதக்கம் பெற்றவர்கள் விவரம் (அவர்களின் வயது அடைப்புக் குறிக்குள்): 

பி.நடேசரெட்டி (84) 2 தங்கம், ஒரு வெள்ளி. 

கே.பரமசிவம் (82) 2 வெள்ளி, 2 வெண்கலம். 

ஆர்.நடராஜன் (65) ஒரு வெண்கலம். 

ஜி.மாரிமுத்து (65) ஒரு வெள்ளி. 

கே.கண்ணுசாமி (65) ஒரு வெள்ளி. 

கே.வரதராஜன் (65) ஒரு வெள்ளி. 

என்.பாலசுந்தரம் (60) ஒரு வெண்கலம். 

ஏ.தெய்வநாயகம் (60) ஒரு வெண்கலம். 

ஏ.பக்கிரிசாமி (60) ஒரு வெண்கலம். 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பி.பவானி (50) 2 தங்கம், 2 வெள்ளி. 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.லட்சுமி (50) ஒரு தங்கம், ஒரு வெள்ளி. 

ஏ.வேல்முருகன் (45) ஒரு வெள்ளி. 

ஜே.தியாகராஜன் (35) ஒரு வெண்கலம். 

சப்-இன்ஸ்பெக்டர் ஜி.விஜி (35) 2 தங்கம்.

                   கடலூர் மாவட்ட அணிக்கு, மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கச் செயலாளர் என். பாலசுந்தரம் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். கடலூர் மாவட்ட காவல் துறையில் இருந்து போட்டியில் கலந்துகொண்டு, பதக்கம் வென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் பவானி, லட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பாராட்டி திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கினார். 









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior