உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறை பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துறைத் தலைவர் பஞ்சநாதம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாதவி வரவேற்றார். துணை வேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார்.

              பின்னர் 19 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் சமிர்ப்பித்த 450 ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட 5 மேலாண்மைத் துறை நூல்களை வெளியிட, ஜெயக்கிருஷ்ணன், சமுத்திர ராஜகுமார், லதா, தமிழ்ச்செல்வி, சோலையப்பன், ராஜாமோகன், ஆனந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் ரமேஷ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். தொலை தூரக்கல்வி இயக்குனர் நாகேஷ்வரராவ், பதிவாளர் ரத்தினசபாபதி, கடல் வாழ் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். நிகழ்ச்சியில் நியுசிலாந்தில் பணியாற்றும் மலேசிய பேராசிரியர் எர்னஸ்ட்டு சிரில் தி ரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலாண்மை பேராசிரியர் சையது ஜாபர் நன்றி கூறினார். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior