உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

இலவசப் பொறியியல் படிப்பு

சிதம்பரம்:

               பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு பதிலாக, தமிழகத்தில் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட கல்வியான பொறியியல் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

                சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ப.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் வரவேற்றார். பொதுச் செயலர் ராஜா, பொருளர் கொளஞ்சியப்பன், அமைப்புச் செயலர் சக்திவேல், தலைமை நிலையச் செயலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                      மாவட்ட பொறுப்பாளர்கள் குமார், ராமநாதன் (சென்னை), யுவரிஸ்குமார் (காஞ்சி), வெங்கடேசன் (அரியலூர்), லட்சுமிகாந்தன், காளிமுத்து (புதுக்கோட்டை), ஸ்டீபன், ஜீவா (திருச்சி), சுந்தரராஜன், மணிகண்டன் ஜோசப் (தஞ்சை), ஆடியபாதம் (நாகை), விஜயகுமார் (திருவாரூர்), சரவணன், திராவிடமணி (திருவண்ணாமலை), சேகர் (உதகை), சித்தன், ரங்கசாமி (ஈரோடு), சந்திரசேகர் (திருவள்ளூர்) உள்ளிட்டோர் பேசினர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior