உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஆங்கிலேயர் காலத்து கடலூர் பெண்ணையாற்று பாலம் சீரமைக்க கோரிக்கை

கடலூர் :
 
            கடலூர் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதே பாலம் போக்குவரத்துக்கு சரியில்லாமல் பலவீனமாக இருந்தது. அதே சமயம் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் கடலூர் பெண்ணை ஆற்றின் மேல் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

               இதனால் பழைய பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. காலத்துக்கேற்ப மக்கள் தொகை பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

              இந்த நிலையில் பழைய பாலத்தின் மேல் மரம், செடி கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது. எனவே ஆங்கிலேயர் காலத்துக்கு பழைய பாலத்தை சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துகள் தவிர்க்கப்படும். பழைய பாலத்தை சீரமைப்பதன் மூலம் அது மக்களின் பயன்பாட்டுக்கு விடலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior