உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 11, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

விருத்தாசலம்:

               விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை வகுப்பை புறக்கணித்து கோட்டாட்சியரிடம் மனுகொடுக்க ஊர்வலமாகச் சென்றனர். 

               திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் மணிமுத்தாறு உள்ளது. இப்பகுதியில் மணல் எடுப்பதற்காக கல்லூரி செல்லும் வழியாக நாள்தோறும் மாட்டு வண்டிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மணல் வண்டி செல்வதால் கல்லூரி செல்வதற்கு இடையூறாக இருக்கிறது எனக்கூறி மாணவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஊர்வலமாகச் சென்று, கடலூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்றனர்.  

             அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த போலீசார்  கோட்டாட்சியரை பார்க்க அனுமதிக்காமல், தாங்களே கோட்டாட்சியரிடம் மனுவை கொடுப்பதாகக் கூறி மனுவை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior