உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 11, 2011

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களில் பெண்களே அதிகம்

கடலூர்:

        தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
              வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண், முதிர் கன்னி மற்றும் ஊனமுற்றோர்களுக்கு தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் மாதம் தோறும் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் வரை 61 ஆயிரத்து 888 பேர் உதவித் தொகை பெற்று வந்தனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதியோர் உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் உதவி பெற ஏராளமானோர் முன் வந்துள்ளனர்.

                இதனால் ஜூன் மாதம் பயனாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. அதில் ஆண்கள் 16 ஆயிரத்து 527 பேரும், பெண்கள் 45 ஆயிரத்து 573 பேரும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெற்று வருகின்றனர். மேலும், ஆங்காங்கே நடைபெற்று வரும் மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டங்களில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 8ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 513 மனுக்களில் முதியோர் உதவித் தொகை கோரி 300க்கும் மேற்பட்ட மனுக்களாகும். உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதால், வருவாய் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior