உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 01, 2011

கடலூர் மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி மாணவன் அன்பசரனுக்கு பாராட்டு விழா

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் இளம் விஞ்சானிக்கு பாராட்டு விழா நடந்தது. 

              தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களை அறிவியல் மற்றும் கணிதத்துறையில் ஆர்வத்தை தூண்டிட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி மாணவன் அன்பசரன் மாவட்ட அளவில் இளம் விஞ்சானி விருது பெற்றுள்ளார்.கடலூரில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் அவரது படைப்பை வெளிபடுத்த சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி வழங்கினார்.

             பள்ளியில் மாணவனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் வேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். ஆசிரியர்கள் சிவகுருநாதன், மணிமொழி சரவணாஸ்ரீ, ஜான்சி முன்னிலை வகித்தனர். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சரஸ்வதிலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்ற மாணவனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பின்னர் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்ற மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior