உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 06, 2011

சென்னையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்க மூன்று புதிய சேவை மையங்கள்

           பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அளிக்க மூன்று புதிய சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளது. 

இம்மையங்கள் சென்னையில் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

புதிய மையங்கள் செயல்படவுள்ள இடங்கள்: 

நவீன்ஸ் பிரசீடியம் - நெல்சன் மாணிக்கம் சாலை, 
பானுமதி ராமகிருஷ்ணா சாலை - சாலிகிராமம், 
துரைசாமி ரெட்டி தெரு - தாம்பரம்.

            இதனால், ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவுசெய்து சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் அளிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

             ஆன்லைன் மூலமாக ஏற்கெனவே விண்ணப்பங்களை அளிப்பதற்கான தேதியை பெற்றுள்ளோர் வரும் அக்டோபர் மாதம் வரை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல அலுவலகத்திலேயே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இம்மாதம் 16-ம் தேதியிலிருந்து புதிய மையங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior