உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 10, 2011

கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு

கடலூர்:

                கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.  இதுதொடர்பாக கடலூர் நகராட்சி சிறப்புக் கூட்டம் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

              வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இதுகுறித்து ஆணையர் இளங்கோவன் கூறியது: 

             கடலூர் நகராட்சிக்கான வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து திருத்தங்கள் மற்றும் கருத்துக்களைத்  தெரிவிக்கலாம். நகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கும் சேர்த்து, 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நகராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்தும் வரும் 15-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். 
  
கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 

மொத்த வாக்காளர்கள்  1,05,456. 

இதில் 

ஆண்கள் 52,212. 

பெண்கள் 53,244.

                சாமியார்பேட்டை-கொள்ளிடம் வரை சுற்றுலா சாலைசிதம்பரம், செப்.9: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடலோர கிராமமான சாமியார்பேட்டையை சுற்றுலா மையமாக அறிவித்தும், சாமியார்பேட்டையிலிருந்து கிள்ளை பிச்சாரவரம் வழியாக கொள்ளிடம் வரை சாலை அமைத்து அதனை சுற்றுலா சாலையாக அறிவித்திட வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior