உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 19, 2011

விருத்தாசலம் நகரமன்ற அ.தி.மு.க. வேட்பாளராக அரங்கநாதன் அறிவிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/dfc801b6-2df2-4f0c-b3a5-e58eae83f50c_S_secvpf.gif




விருத்தாசலம்

             உள்ளாட்சி தேர்தலில் விருத்தாசலம் நகரசபை அ.தி.மு.க. வேட்பாளராக அரங்கநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அரங்கநாதன் பிறந்த தேதி 15.2.1949. விவசாயம் மற்றும் லாரி போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வரும் இவர். 1972 முதல் கட்சி அடிப்படை உறுப்பினராக உள்ளார். 1980-ம் ஆண்டு நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்டப்டார்.

      அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர் கட்சியின் மாவட்ட இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது தொகுதி செலயாளராக பணியாற்றி வருகிறார்.

               அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2001-ல் விருத்தாசலம் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது அவர் 2-வது முறையாக நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior