உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் 13 இடங்களை அ.தி.மு.க.கைப்பற்றியது

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் 13 துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., 2, காங்., ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் வடலூர், பரங்கிப்பேட்டை இரண்டை தவிர மற்ற 14 பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் பரங்கிப்பேட்டை, வடலூர் பேரூராட்சிகளில் தி.மு.க.,வும், புவனகிரியில் காங்., கட்சி கைப்பற்றியது. மற்ற 13 பேரூராட்சிகளிலும் துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க.,வே கைப்பற்றியது. 

அதன் விபரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

              பேரூராட்சி 15 வார்டில் அ.தி.மு.க., 4, தி.மு.க., 3, தே.மு.தி.க., 1, பா.ம.க., 1, சுயேச்சை 6 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் செல்வி, தி.மு.க., சுகுமார் போட்டியிட்டனர். தலைவர் உட்பட 16 பேர் ஓட்டளித்தனர். 13 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., செல்வி துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.

புவனகிரி: 

           பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க., வள்ளி வெற்றி பெற்றார். நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் உஷாராணியும், காங்., சார்பில் ராம்குமார் மனுத் தாக்கல் செய்தனர். போட்டியிருந்ததால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தலைவர் மற்றும் 18 கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். பதிவான 19 ஓட்டுகளில் காங்., ராம்குமார் 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி கலைப்பாண்டி வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை: 

            பேரூராட்சி தலைவராக தி.மு.க., முகமது யூனுஸ் வெற்றி பெற்றார். 18 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க., 2, சுயேச்சைகள் 8 பேர் வெற்றிப்பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் கணேசன், தி.மு.க., சார்பில் நடராஜன் போட்டியிட்டனர். ஒரு உறுப்பினர் தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 18 ஓட்டுகளில் தி.மு.க., நடராஜன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ஜீஜாபாய் சான்றிதழ் வழங்கினார்.

கிள்ளை: 

             அ.தி.மு.க., சார்பில் காத்தவராயசாமி, பொன்மொழி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 15 கவுன்சிலர் மற்றும் தலைவர் என மொத்தமுள்ள 16 பேரில் அ.தி.மு.க., உறுப்பினர் விஜயலட்சுமி தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 15 ஓட்டுகளில் இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. மீதமுள்ள 13 ஓட்டுகளில் பொன்மொழி 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் முகம்மது மன்சூர் சான்றிதழ் வழங்கினார்.

தொரப்பாடி: 

             அ.தி.மு.க., வைச் சேர்ந்த 14வது வார்டு உறுப்பினர் கனகராஜ் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் கனகராஜ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ராணி அறிவித்தார்.

சேத்தியாத்தோப்பு: 

              தேர்தல் அலுவலர் ஆறுமுகத்திடம் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத் தாக்கல் செய்யாததால், ராமலிங்கம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

திட்டக்குடி: 

             பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணி மனுத் தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் மணி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் குப்புசாமி அறிவித்தார்.

பெண்ணாடம்: 

          அ.தி.மு.க., செல்வி மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ராம்குமார் அறிவித்தார். அவருக்கு சேர்மன் மதியழகன் வாழ்த்து தெரிவித்தார்.

குறிஞ்சிப்பாடி: 

           அ.தி.மு.க., நகர செயலரும், ஆறாவது வார்டு உறுப்பினரான ரஜினிகாந்த் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜோதிமாணிக்கம் அறிவித்தார்.

காட்டுமன்னார்கோவில்: 

            அ.தி.மு.க., சாமிநாதனும், லால்பேட்டை பேரூராட்சியில் மனித நேய மக்கள் கட்சி அகமது அலி போட்டியின்றி துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மங்கலம்பேட்டை: 

        சுயேட்சை உறுப்பினர் ஜியாவுதின் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
ஸ்ரீமுஷ்ணம்:

        அ.தி.மு.க., சின்னப்பன் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
கங்கைகொண்டான்: 

      அ.தி.மு.க., ராஜ்மோகன் போட்டின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
வடலூர்: 

      தி.மு.க.,வைச் சேர்ந்த விஜயகுமாரி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அண்ணாமலைநகர்:

          அ.தி. மு.க., செந்தில்குமார் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 




















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior