உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூரில் பழுதடைந்த சாலைகளால் மக்கள் சிரமம்: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு மழையில் நனைகிறது


கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையின் பரிதாப நிலை. (வலது படம்) தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்
கடலூர்:

          கடலூரில் பழுதடைந்துள்ள சாலைகளால், மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு, 4-வது ஆண்டாக வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது கடலூர் நகரம். நகரின் மையப் பகுதியில் செல்லும் 12 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. 

                இதனால் கடலூர் நகர மக்களும் கடலூர் வழியாக செல்லும் பயணிகளும் படாத பாடுபட்டு வருகின்றனர். முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தாற்காலிகமாகக் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதால், இச்சாலையைப் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பலர் கீழேவிழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. புதுப்பாளையம் பிரதானச்சாலை, வண்டிப்பாளையம் சாலை, பஸ்நிலையச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சிதைந்து கிடக்கும் நிலையில், 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மட்டுமாவது, 3 நாள்களுக்குள் சீரமைக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

              ஆனால் அதன்படி, சாலை சீரமைப்புப் பணி வேகமாக நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சாலை சீரமைக்கப்படுகிறது. பிரதானச் சாலைகள் பலவும் பழுதடைந்துள்ளதால், அவற்றை பயன்படுத்தும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து உள்ளது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வழக்கத்தைவிட 30 நிமிடம் முன்னதாகவே வீடுகளில் இருந்து புறப்பட்டாக வேண்டிய நிலை உள்ளது. 

           மேலும், கடலூர் நகரின் பிரதான அங்காடியான, 400-க்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த திருப்பாப்புலியூர் பான்பரி மார்கெட்டுக்குள், பொதுமக்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு, சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. ஆக்கிரமிப்பு, அசுத்தத்தின் உச்சத்தில் காணப்படும் இந்த மார்க்கெட்டின் நிலை, மழைக்காலத்தில் மக்களை பெரிதும் பரிதவிக்க வைக்கிறது. அடிப்படை வசதியில் கடலூர் நகர மக்களின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரே இடம் பான்பரி மார்க்கெட் தான். இதை சீர்படுத்த யார் துணிவுடன் முன்வருவார்களோ அவர்கள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும், ஊதியம் பெறத் தகுதியுள்ள அலுவலர்களாகவும் இருக்க முடியும் என்பதே சிதம்பரம் நகர் மக்களின் கருத்தாக உள்ளது. 












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior