உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 02, 2011

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர் செல்வி ராமஜெயம் நியமனம்

       வடகிழக்கு பருவமழை தொடர்பாக 12 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     சென்னை நீங்கலாக 12 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் இதுவரை எந்தவித சேதமும் ஏற்படாதபோதிலும்,  12 கடலோர மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, 12 மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்- கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா

காஞ்சிபுரம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா

கடலூர்- சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்.

விழுப்புரம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

நாகப்பட்டினம் - மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்

தஞ்சாவூர், திருவாரூர் - வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்
புதுக்கோட்டை - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன்.

ராமநாதபுரம் - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்

திருநெல்வேலி- கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன்.

கன்னியாகுமரி - வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களா?:

          கடந்த ஆண்டு பருவமழை தொடங்கிய போது கடலோர மாவட்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

              சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்த மாவட்டங்களில் ஆட்சியர்களாக ஏற்கெனவே பணியாற்றிவர்கள் என்பதால் ஆய்வு செய்வதற்கு எளிதாக இருந்தது.
ஆனால், இப்போது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களை மட்டுமே அரசுக்கு அறிக்கையாகத் தர இயலும். இதற்கு மாறாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படும் போது ஆய்வுப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior