உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 02, 2011

தி.வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்: சிதம்பரத்தில் பா.ம.க.வினர் 200 பேர் விலகுவதாக அறிவிப்பு

சிதம்பரம்:

     முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை அடுத்து சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

           முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் முடிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் கர்ணா, கோபு, ரவிச்சந்திரன், தமிழரசன், சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

            வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதை கண்டித்தும், கட்சியின் நிறுவனர் ராமதாசை கண்டித்தும், கட்சிக்காகவும், வன்னியர் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்த பொறுப்பாளர்களை எவ்வித காரணமும் இல்லாமல் வெளியேற்றியதை கண்டித்தும் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட சுமார் 200 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தனர்.

            மேலும் வேல்முருகன் எடுக்கும் எந்த முடிவிற்கும் ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்தனர். இதில் சிதம்பரம் பொறுப்பாளர்கள் அமைப்பு செயலாளர் கோவி.தில்லைநாயகம், தொண்டரணி தலைவர் குமார், பாலு, தமிழ்மணி, சுதாகர், ராமகிருஷ் ணன், சிவா, செந்தில், குணா, சுகுமார், சண்முகம், கார்த்தி, கணேஷ், மாரியப்பன், திருமுட்டம் பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, எழிலரசன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், நாகேஷ்வரன், பாலமுருகன், காட்டு மன்னார்கோயில் பொறுப்பாளர்கள் ஆளவந்தான், சங்கர், பிரகாசு, புவனகிரி பொறுப்பாளர்கள் மனோகரன், சுரேஷ், பிரபு,காசிநாதன், பரங்கிபேட்டை சேர்ந்த பொறுப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், பாலக்கிருஷ்ணன், அருள், குமரன் உள்பட பலர் கலது கொண்டனர்.
















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior