உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 09, 2011

வடலூரில் குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யக் கோரி நாற்று நடும் போராட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/b7ef0df9-39fc-4d84-949d-2acec1abd5d2_S_secvpf.gif
 
வடலூர்:
 
 
           வடலூர் பகுதியில் கடந்த சில நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக இந்த பகுதியில் உள்ள சாலைகள் கடுமையான சேதத்திற்குள்ளானது. குறிப்பாக வடலூர் வழியாக செல்லும் பிரதான சாலையான தஞ்சாவூர்-கும்பகோணத்திலிருந்து சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கடந்த பலமாதமாக மிகமோசமான நிலையில் இருந்து வந்தது.

            இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக பண்ருட்டி தொடங்கி வடலூர் மற்றும் சேத்தியாத்தோப்பு வரை சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலை கடுமையான சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில், காடாம்புலியூர், இந்திராநகர், வடலூர் மருவாய், உள்ளிட்ட பல இடங்களின் அருகில் இந்த கிடு கிடு குண்டும் குழியுமான சாலைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடங்கி கனரக வாகனம் ஓட்டுபவர்கள் வரை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

            மேலும் சேதமான சாலையில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதேபோன்று வடலூர் நெய்வேலி புதுநகர் இணைப்பு சாலையில் தொடங்கி கல்யாணமண்டபம் அருகில் ரெயில்வேகேட் அருகிலும் பள்ளம் ஏற்பட்டு சேறும் சகதியுமாகி பொதுமக்களுக்கு இடையூராக உள்ளன. இதனை கண்டித்து வடலூர் புதுநகர் ரெயில்வேகேட் அருகே நாற்றுநடும் போராட்டம் நடத்தினர்.
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior