உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 14, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கொல்கத்தா பாங்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி இயக்ககம் வாயிலாக வங்கி மேலாண்மை பட்டயப் படிப்புகளை வழங்க கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
          துணைவேந்தர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமி நிர்வாக மேலான் இயக்குநர் ஸ்ரீகலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், கே.பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், 
 
          அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் சமுதாயத்திற்கு பயன் அளிக்கக்கூடிய புதிய படிப்புகளை வழங்கி வருகிறது. இப்போது தொடங்கப்படவுள்ள வங்கி மேலாண்மை பட்டய படிப்பு, அரசு வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடியது. இதன் மூலம் வங்கிகளில் பணிபுரிவதற்கு தேவையான ஆற்றல்மிகு திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior