உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 08, 2011

கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

கடலூர்:

            மழை வெள்ளத்தினால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை சட்டப் பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.  

            கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி (14) மழை வெள்ளத்தில் சிக்கி அண்மையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப் பட்டது.  இதற்கான காசோலையை வாசுகியின் தாயார் கலாவதியிடம் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். கடலூர் வட்டாட்சியர் எழிலன், ஊராட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அதிகாரி தயாளு, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பழநிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாடுகளுக்கு நிவாரணம்: 

          மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த இரு வண்டி மாடுகளுக்கு நிவாரணமாக அவற்றின் உரிமையாளருக்கு ரூ. 40 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.  கடலூர் தங்கராஜ் நகர் சம்பத்துக்குச் சொந்தமான இரு மாடுகள், கெடிலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. இதற்கு நிவாரணமாக ரூ. 40 ஆயிரத்தை சம்பத்திடம், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior