உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 27, 2011

நடுரோட்டில் தவித்த கடலூர் சிறுமியை மீட்ட பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/22afe38a-73d9-48b0-8dde-044358249348_S_secvpf.gif
கடலூர்:
 
       கடலூர் திருப்பாபுலியூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சவுமியா (வயது 7). கடந்த 2 வாரங்களுக்கு முன் அவளை காணவில்லை. பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

            பெரம்பலூர் அருகே ரோட்டில் 7 வயது சிறுமியை 4 பேர் வலுக் கட்டாயமாக பிடித்து இழுத்தனர். நீதிபதி அங்கு சென்றபோது 4 பேரும் தப்பினர். சிறுமியிடம் நீதிபதி விசாரித்தபோது கடலூர் திருப்பா புலியூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் சவுமியா என்று குறிப்பிட்டாள். அந்த சிறுமியை நீதிபதி தன்னுடைய காரில் பரங்கிப் பேட்டைக்கு அழைத்து வந்தார்.

நீதிபதி கோமதி கூறுகையில், 
             சவுமியா குறித்து அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். பெற்றோர் வந்ததும் சிறுமியை ஒப்படைப்பேன் என்று கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior