
கடலூர்:
கடலூரில் 2-வது நாளாக நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல
வில்லை. சுனாமி நினைவு நாளான திங்கட்கிழமை கடலூரில் கடல் சீற்றத்துடன்
காணப்பட்டது. மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்துக்குள் கடல் நீர்
புகுந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதியில்
தஞ்சம்புகுந்தனர்.
துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் “தானே” புயல் உருவாகியுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் இன்று ராட்சத அலைகள் எழும்பின. தாழங்குடா பகுதியில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதையடுத்து 2-வது நாளாக நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
துறை முகத்தின் கரையோரத்தில் படகுகள் தொடர்ந்து ஓய்வெடுப்பதை காண முடிந்தது. சுனாமிதினம் உள்பட 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்தது. இதனால் மீன்விலை அதிகரித்தது.
துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் “தானே” புயல் உருவாகியுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் இன்று ராட்சத அலைகள் எழும்பின. தாழங்குடா பகுதியில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதையடுத்து 2-வது நாளாக நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
துறை முகத்தின் கரையோரத்தில் படகுகள் தொடர்ந்து ஓய்வெடுப்பதை காண முடிந்தது. சுனாமிதினம் உள்பட 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்தது. இதனால் மீன்விலை அதிகரித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக