உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 29, 2011

தானே புயல்: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:
 
         தானே புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.
 
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கூறியது: 
 
          கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரைகளில் வசிக்கும் மக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தங்களது குடிசைகளுக்குள் தங்காமல், பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். 
 
 புயல் பாதுகாப்பு மையங்கள்:
 
                  20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior