உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 05, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள்

கடலூர்:

               பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் கடலூரிலேயே செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கையேடுகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவற்றை மாணவர்களின் பெற்றோர் சென்னை சென்று வாங்கி வந்தனர். 

                தற்போது வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகளை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலேயே விற்பனை செய்ய, கல்வி அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.  கடலூர் மாவட்டத்துக்கான வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகள், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 5-9-2011 முதல் விற்பனை செய்யப்படும். மாணவர்கள் இக்கையேடுகளை வாங்கிப் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior