உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் புதிய மின் கம்பங்கள் வாங்க முடிவு

           தானே புயல் புரட்டிப் போட்ட கடலூர் மாவட்டத்தில், மின் கம்பங்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மின் கம்பங்கள் வழங்கும் சூழல் உள்ளது. 
 
         நிலைமையைச் சமாளிக்க, ஒரிசா , ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து, 10 ஆயிரம் மின் கம்பங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "தானே" புயல் ஏற்படுத்திய மீளமுடியாத பாதிப்புகளால், கடலூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் மின்சார உள்கட்டமைப்புகள் அடியோடு சேதமடைந்து, மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

        புயல் பாதித்த மாவட்டங்களில், இதுவரை, 45 ஆயிரம் கம்பங்கள் சேர்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றிற்கு பதில், அமைக்க வேண்டிய  புதிய கம்பங்களுக்கு, அதிக தட்டுப்பாடு உள்ளன. நேற்று வரை, மின் வாரியத்திற்கு, 20 ஆயிரம் புதிய கம்பங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 10 ஆயிரம் மின் கம்பங்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட மின் வாரிய கிடங்குகளிலிருந்து மின் கம்பங்களும், கேபிள்களும் கொண்டு வரப்படுகின்றன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior