உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல் : நெல்லிக்குப்பத்தில் வாழை பழம் விலை கடும் சரிவு

நெல்லிக்குப்பம் : 
 
            நெல்லிக்குப்பத்தில் தெருக்களில் வாழைப்பழத்தை கூவி விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 
 
             நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று வாழைக்குலைகளை வாங்கி வந்து பழுக்க வைத்து விற்பனை செய்வார்கள். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் ஒரே நேரத்தில் வாழை மரங்கள் விழுந்ததால் அவற்றை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. இதனால் கிடைத்த வரை கிடைக்கட்டும் என நினைத்து விவசாயிகள், விழுந்த வாழைக் குலைகளை பழுக்க வைத்து தாங்களே நேரடியாக விற்க துவங்கியுள்ளனர். நெல்லிக்குப்பத்தில் நேற்று விவசாயி ஒரு லோடு கேரியர் முழுவதும் 300 வாழைத் தார்களை ஏற்றிக் கொண்டு வந்து விற்பனை செய்தார். நூறு பழங்கள் கொண்ட ஒரு தாரை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயிற்குள் விற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior